228,000 சிறு விவசாயிகளுக்கு எதிர்வரும் பருவத்தில் இலவச உரம் விநியோகிக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
ஜப்பான் அரசாங்கத்தின் உதவியுடன் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் பெறப்பட்ட 8,360 மெற்றிக் டன் உரத்தை விவசாய அமைச்சிடம் கையளிக்கும் நிகழ்வின்போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ள விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பினருடனும் விரிவான கலந்துரையாடல் ஆரம்பிக்கப்படும் என விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
