Monday, June 2, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கு இந்தியா மேலும் 2 பில்லியன் டொலர் உதவி

இலங்கைக்கு இந்தியா மேலும் 2 பில்லியன் டொலர் உதவி

இலங்கைக்கு மேலும் 2 பில்லியன் அமெரிக்க டொலரை வழங்க இந்தியா தயாராகவுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் சீனாவின் செல்வாக்கை குறைக்கும் நோக்கில், இந்தியா இவ்வாறு மேலதிக கடன் உதவிகளை வழங்குவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே, இந்தியா, இலங்கைக்கு 1.9 பில்லியன் அமெரிக்க டொலரை நேரடி கடன் மற்றும் நாணய பரிமாற்ற உதவிகளை வழங்கியுள்ளது.

அத்துடன், அத்தியாவசிய மற்றும் மருந்து பொருட்களுக்கான உதவிகளையும் தொடர்ந்தும் வழங்கி வருகின்றது. இந்தநிலையில், மேலும் இரண்டு பில்லியன் அமெரிக்க டொலரை வழங்க இந்தியா தயாராகியிருப்பதாகவும், அது தொடர்பான உத்தியோகப்பற்றற்ற பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் இந்திய தகவல்களை மேற்கோள்காட்டி, ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles