லிட்ரோ சமையல் எரிவாயுவின் விநியோகப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
அதன் எரிவாயு முனையம் அமைந்துள்ள முத்துராஜவளை முனையத்தொகுதி வரும் 17ம் திகதி வரையில் மூடப்பட்டிருக்கும்.
அதன் பின்னர் விநியோகப் பணிகள் மீள ஆரம்பிக்கப்படும் என்று லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
எனினும் ஏற்கனவே சந்தையில் போதுமான அளவு எரிவாயு விநியோகிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.