பயிர்களை பாதுகாத்துக் கொள்வதற்காக விவசாயிகளுக்கு துப்பாக்கி உரிமம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
பயிர் பாதுகாப்பு நோக்கங்களுக்காக துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதற்காக காணப்பட்ட முன்னைய சட்டங்கள் திருத்தப்பட்டு, துப்பாக்கி உரிமம் பெறக்கொள்ளக்கூடிய பயிரிடும் நிலப்பரப்பை 5 ஏக்கராக மாற்றத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அரச பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.
இது தொடர்பில் விளக்கமளித்த அமைச்சர், ஒரு வருடத்தில் பல்வேறு வன விலங்குகளினால் பயிர்கள் பெருமளவில் அழிவடைவதால், அவசர தேவையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.