Saturday, September 21, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபயிர்களை பாதுகாத்துக் கொள்ள விவசாயிகளுக்கு துப்பாக்கி வழங்க தீர்மானம்

பயிர்களை பாதுகாத்துக் கொள்ள விவசாயிகளுக்கு துப்பாக்கி வழங்க தீர்மானம்

பயிர்களை பாதுகாத்துக் கொள்வதற்காக விவசாயிகளுக்கு துப்பாக்கி உரிமம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

பயிர் பாதுகாப்பு நோக்கங்களுக்காக துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதற்காக காணப்பட்ட முன்னைய சட்டங்கள் திருத்தப்பட்டு, துப்பாக்கி உரிமம் பெறக்கொள்ளக்கூடிய பயிரிடும் நிலப்பரப்பை 5 ஏக்கராக மாற்றத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அரச பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.

இது தொடர்பில் விளக்கமளித்த அமைச்சர், ஒரு வருடத்தில் பல்வேறு வன விலங்குகளினால் பயிர்கள் பெருமளவில் அழிவடைவதால், அவசர தேவையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles