வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று (12) அதிகாலை மீன் ஏற்றிச் செல்லும் லொறியில் 54 ஆடுகளை யாழ்ப்பாணத்திலிருந்து மேட்டுக்கு இறைச்சிக்காக எடுத்துச் சென்ற நபர் கைது செய்யப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
சட்டவிரோதமான முறையில் ஆடுகளை ஏற்றிச் சென்ற லொறி தொடர்பில் வவுனியா தலைமையக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமாக ஆடுகளை ஏற்றிச் சென்ற லொறியுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
யாழ்ப்பாணம் பகுதியில் இருந்து திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆடுகள் அனுமதிப்பத்திரம் இன்றி இரகசியமாக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர், பிரதான வீதிகளில் பொலிஸாரின் வீதித் தடைகளைத் தவிர்த்து, நீண்ட காலமாக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு இறைச்சிக்காக விலங்குகளை ஏற்றிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மீட்டகப்பட்ட ஆடுகளின் பெறுமதி ஆறு இலட்சம் ரூபாவிற்கும் அதிகம் எனவும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் போக்குவரத்தை மட்டுமே மேற்கொள்பவர் எனவும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கல்கிஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடையவர் எனவும் அவர் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.