ஆர்ப்பாட்ட பேரணிகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கும் வகையிலான உத்தரவொன்றினை இன்று கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
அதன்படி ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதி அமைச்சின் வளாகம், அலரிமாளிகை மற்றும் அதனை அண்டிய பகுதிகளை நோக்கி பலர் பேரணியாக செல்வதைத் தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கோட்டை பொலிஸ் நிலையத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.