Friday, June 12, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇடமாற்றத்தை ஏற்றுக் கொள்ள மாட்டேன் - அஜித் ரோஹண

இடமாற்றத்தை ஏற்றுக் கொள்ள மாட்டேன் – அஜித் ரோஹண

தென் மாகாணத்திற்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கிழக்கு மாகாணத்திற்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக வெளியான அறிவிப்பு தொடர்பில் அவர் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த இடமாற்றத்திற்கு பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரம் வழங்கப்படாத நிலையில், இந்த உத்தரவு சட்டவிரோதமானது என்றும் சட்டத்திற்கு முரணானது என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் தான் இந்த இடமாற்ற உத்தரவை நடைமுறைப்படுத்தப் போவதில்லை என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles