மார்ச் மாதத்தில் 125,495 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
2020 பெப்ரவரிக்குப் பிறகு, இந்த மாதமே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
ரஷ்யா, இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகியவை சுற்றுலாப் பயணிகளின் முக்கிய நாடுகளாகும்.
இந்த ஆண்டு 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டதாகவும், அந்த எதிர்பார்ப்பு 2 மில்லியனாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் சுற்றுலா ஊக்குவிப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
