மலேசிய அரசாங்கம் இலங்கைக்கு பாதுகாப்பு சேவைகள் துறையில் 10,000 வேலை வாய்ப்புகளை கூடுதலாக ஒதுக்கியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள 10,000 வேலை வாய்ப்புகளுக்கு மேலதிகமாக இந்தப் புதிய ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (14) நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.