ஆடைகளுக்கான முன்பதிவுகள் குறைந்துள்ள தருணத்தில் மின் கட்டணத்தை அதிகரிப்பது, எதிர்காலத்தில் நாட்டின் ஆடைத் தொழிற்துறையில், எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என ஒன்றிணைந்த ஆடைத் தொழிற்துறை சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் உபதலைவர் ப்ளீக்ஸ் ஏ பெர்னாண்டோ இதனைத் தெரித்துள்ளார்.
மின் கட்டண அதிகரிப்பு காரணமாக உற்பத்திச் செலவு 5 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நாட்டுக்கு வழங்கப்பட்ட ஜீ.எஸ்.பி. ப்ளஸ் வரிச்சலுகையை மீளப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மந்த கதியில் இடம்பெறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
