கொழும்பின் பல பகுதிகளில் மார்ச் 4 ஆம் திகதி 24 மணித்தியால நீர்வெட்டு அமுலாகுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு 01, 04, 07, 11 மற்றும் கடுவெல நகரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகள், கொலன்னாவ மாநகர சபைக்குட்பட்ட பகுதி, வெல்லம்பிட்டிய மற்றும் கொட்டிகாவத்தை ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.