கந்தானை – வெலிகம்பிட்டிய – கணேமுல்ல வீதியில் தும்பேலிய பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 17 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த சிறுவன் எதிர்த்திசையில் பயணித்த காரை தவிர்க்க முற்பட்டதில் சறுக்கி விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் ஜா-எல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
கப்புவத்தை பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளார்.
கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கந்தானை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.