கொழும்பு பல்கலைக்கழக மாணவி ஒருவரை கொலை செய்த நபர் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கொலைச் சம்பவத்தின் போது சந்தேகநபர் அணிந்திருந்த ஆடைகள், அவர் பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசி, இரத்த மாதிரிகள் உள்ளிட்ட 11 பொருட்களை அரசாங்க பரிசோதகர்களிடம் சமர்ப்பித்து அறிக்கைகளுக்காக அழைக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.