இவ்வருடம் உள்நாட்டு காய்ந்த மிளகாய் உற்பத்தியை 25 வீதத்தால் அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விவசாயத்துறை நவீனமயமாக்கல் செயற்றிட்ட அதிகாரிகளுக்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ஆலோசனை வழங்கினார்.
இலங்கைக்குத் தேவையான மொத்த காய்ந்த மிளகாயின் அளவு 55,000 மெட்ரிக் தொன் என்றாலும், அதில் 50,000 மெட்ரிக் தொன் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும், இலங்கையின் வருடாந்த மிளகாய் உற்பத்தி சுமார் 5000 மெட்ரிக் தொன் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பதுளை கும்பல்வெலயில் மிளகாய் செய்கை வேலைத்திட்டத்தை அவதானிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்வாறு தெரிவித்தார்.