பொரளை தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிறுநீரகங்களைப் பெற்றுக் கொள்வதற்காக வறிய மக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்ட மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த சந்தேக நபர் நேற்றிரவு டுபாய் செல்வதற்காக விமான நிலையத்துக்கு சென்றிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் வைத்தியசாலையில் பணிபுரிபவர் போன்று வேடமணிந்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்