Friday, June 26, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமருமகனின் தாக்குதலில் மாமனார் பலி

மருமகனின் தாக்குதலில் மாமனார் பலி

ஹட்டன் – திக் ஓயா ஒடாரி தோட்டத்தில் மருமகனின் தாக்குதலில் மாமனார் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (09) பிற்பகல் 3 மணியளவில் மாமாவுக்கும் மருமகனுக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டதில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஹட்டன் திக் ஓயா ஒடாரி தோட்டத்தைச் சேர்ந்த கருபன் காமராஜன் (62) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே மோதலில் உயிரிழந்துள்ளார்.

மருமகனின் தாக்குதலுக்குள்ளான நபர் பலத்த காயமடைந்துள்ளதுடன், அவர் திக் ஓயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.

சந்தேக நபரை ஹட்டன் பொலிஸார் நேற்று (09) இரவு கைது செய்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles