இந்தியாவின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட யாழ் கலாசார நிலையத்தின் பிரதிஷ்டை நிகழ்வில் பங்கேற்பதற்காக இந்தியாவின் தகவல் மற்றும் ஒலிபரப்பு இராஜாங்க அமைச்சர் எல். முருகன் இன்று இலங்கை வரவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது அவர் இலங்கையில் இந்தியாவின் மக்களை மையமாகக் கொண்ட அபிவிருத்தி பங்காளித்துவத்தின் கோடிட்டுக் காட்டும் பல்வேறு தளங்களை பார்வையிடவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது அவர் தலைவர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.