மொரவக்க நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட இரு கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
அவர்கள் இருவரும் நேற்று (01) சிறைச்சாலை அதிகாரிகளின் பிடியில் இருந்து தப்பிச் சென்றதாக மேலதிக சிறைச்சாலை ஆணையாளரும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
அவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
