தற்போது அனைத்து அரச நிறுவனங்களிலும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (31) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஒவ்வொரு அமைச்சின் செலவினங்களைக் குறைக்குமாறு திறைசேரி பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.