Thursday, April 23, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமீனவர் ஒருவர் சடலமாக மீட்பு

மீனவர் ஒருவர் சடலமாக மீட்பு

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருவடிநிலை கடலில் மீனவர் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த மீனவர் நேற்றையதினம் கடற்றொழிலுக்கு சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இன்றையதினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியைச் சேர்ந்த கணபதி தவம் (58) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles