பாதாள குழு மற்றும் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவரான கஞ்சிபானி இம்ரான் இலங்கையிலிருந்து தமிழகத்திற்குள் நுழைந்துள்ளதாக ‘தி இந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
பாதாள உலக குழு தலைவன் கஞ்சிபானி இம்ரான் ராமேஸ்வரத்துக்குள் பிரவேசித்துள்ளதாக தமிழக புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவதானமாக இருக்குமாறு மாநிலம் முழுவதும் உள்ள உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

