Saturday, May 24, 2025
28.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தடை இல்லை - பந்துல குணவர்தன

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தடை இல்லை – பந்துல குணவர்தன

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கோ அல்லது அரசாங்கத்திற்கோ உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாதிருக்கும் நோக்கம் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். .

நேற்றைய வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

UNP – SLPP தலைமையிலான கூட்டணி ஏற்கனவே தனது தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும், வேட்புமனு பரிசீலனைக்கு பொருத்தமான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஏற்கனவே கோரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles