Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உலகம்புட்டினை விமர்சித்த மொடல் அழகி பயணப்பொதியில் சடலமாக மீட்பு

புட்டினை விமர்சித்த மொடல் அழகி பயணப்பொதியில் சடலமாக மீட்பு

புட்டினை விமர்சித்த ரஷ்ய மொடல் அழகி ஒருவர் பயணப்பொதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிரெட்டா வெட்லர் என்றழைக்கப்படும் 23 வயதான குறித்த பெண், கடந்த ஆண்டு புட்டினை விமர்சித்து தனது சமூகவலைத்தள பக்கத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.

அதற்கு பலர் பாராட்டு தெரிவித்து வந்த நிலையில், அந்த பதிவை இட்டு ஒரு மாதத்திற்கு பின்னர் அவர் திடீரென மாயமானார்.

இதனால் புட்டின் அரசு அவரை கைது செய்திருக்கும் என தகவல்கள் வெளியாகின.

எனினும் அண்மையில், அவர் சாலையில் கிடந்த ஒரு பயணப்பொதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில் கிரெட்டாவின் ஆண் நண்பரான டிமிட்ரி கொரோ அவரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டு காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், அவரை கொலை செய்ததாகவும், மேலும் சடலத்துடன் 3 நாட்கள் சுற்றியழைந்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெடிபொருட்களுடன் நால்வர் கைது

வெடிபொருட்களுடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவுல - நிகுல வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, மூன்று...

Keep exploring...

Related Articles