கிழக்கு மாகாணத்திலுள்ள இறைச்சி கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
கடும் குளிரான வானிலையால் கடந்த நாட்களில் பல கால்நடைகளை உயிரிழந்தன.
இதனை அடுத்து மாகாண மற்றும் மாவட்டங்களுக்கு இடையில் இறைச்சி பரிமாற்றம் இடைநிறுத்தப்பட்டது.
இறந்த கால்நடைகளின் மாதிரிகள் தற்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
இந்த நிலையில் எதிர்வரும் 18 ஆம் திகதி வரையில் கிழக்கு மாகாணத்திலுள்ள கோழி இறைச்சி கடைகளைத் தவிர ஏனைய இறைச்சி கடைகளை மூடிவைப்பதற்கு மாகாண அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
