அடுத்த வருடம் ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு முன்னர் போதிய நிலக்கரி கிடைக்காவிட்டால், வரலாற்றில் மிக நீண்ட மின்வெட்டை நாடு எதிர்கொள்ள நேரிடும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன இதனை தெரிவித்தார்.
60,000 மெற்றிக் டன் நிலக்கரி ஏற்றிச் செல்லும் 38 கப்பல்கள் எமது நாட்டுக்கு தேவைப்பட்ட போதிலும் நாட்டிற்கு 4 கப்பல்களே கிடைத்துள்ளன.
இந்த நாட்களில் நுரைச்சோலையில் உற்பத்தி நடவடிக்கைகளுக்காக நிலக்கரி பெறப்படுவதாகவும் அவர் கூறினார்.