நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தொடர்புடைய அனைத்து நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட துணைக் குழுவை நியமிப்பதற்கு குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால கொள்கைகளை வகுப்பதில் முன்னுரிமைகளை அடையாளம் காண்பது குறித்து நேற்று (10) தேசிய சட்டமன்ற உப குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
இந்தக் குழு நேற்று (10) அதன் தலைவர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது.
விவசாயம் மற்றும் மீன்பிடி அமைச்சுகளின் அதிகாரிகள் மற்றும் அந்த அமைச்சுகளின் கீழ் உள்ள ஏனைய நிறுவனங்களின் அதிகாரிகள் இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
உணவுப் பாதுகாப்பு தொடர்பான இலக்குகளை அடைவதில் உள்ள தடைகள் மற்றும் கொள்கைகள் எவ்வாறு மாற்றப்பட வேண்டும் என்பது தொடர்பான அடிப்படை முன்மொழிவுகள் குறித்து இங்கு விவாதிக்கப்பட்டது.
