கிருமிநாசினி திரவ உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் எதனோல் மீதான இறக்குமதி வரியை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் 1.6 பில்லியன் ரூபா வரி வருமானம் கிடைக்கும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
2020 ஆம் ஆண்டு கொவிட் தொற்றுநோய்களின் போது கிருமிநாசினி திரவங்கள் பாரியளவில் உற்பத்தி செய்யப்பட்டதன் காரணமாக இந்த எதனோல் வரி இரண்டு தடவைகள் குறைக்கப்பட்டதாகவும், அது மீண்டும் வழமையான நிலைக்கு கொண்டு வரப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
