மற்றுமொரு நிலக்கரி கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் அன்ட்ரூ நவமுனி தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்காவில் இருந்து 60,000 மெற்றிக் டன் எடையுள்ள இந்த நிலக்கரி கப்பல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், கப்பலிலிருந்து நிலக்கரி இறக்கும் பணி நேற்று (10) ஆரம்பமாகியது.
இதுவரை 03 நிலக்கரி கப்பல்கள் நாட்டுக்கு வந்துள்ளதாக இலங்கை மின்சார சபை குறிப்பிடுகிறது.
