Saturday, May 9, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதிலினி, ஜானகி, சிறிசுமன ஆகியோரை நானே சிறைக்கு அனுப்பினேன் - அசாத் சாலி

திலினி, ஜானகி, சிறிசுமன ஆகியோரை நானே சிறைக்கு அனுப்பினேன் – அசாத் சாலி

திலினி பிரியமாலி, ஜானகி சிறிவர்தன மற்றும் பொரளை சிறிசுமண தேரர் ஆகியோர் தனது சாட்சியங்களின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜானகி சிறிவர்தனவின் அலுவலகத்தில் அனைத்து பணப் பரிவர்த்தனைகளையும் திலினி பிரியமாலி செய்ததாகவும், ஜானகி சிறிவர்தன தான் அவருக்கு திலினியை அறிமுகப்படுத்தியதாகவும் அசாத் சாலி கூறினார்.

திலினி பிரியமாலியுடன் தான் திருமணத்துக்கு அப்பாலான உறவை கொண்டிருந்ததாக நிரூபிக்குமாறு எவருக்கும் சவால் விடுவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles