இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க விவகாரம் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க கருத்து தெரிவித்துள்ளார்.
‘ஆண்கள் ஆண்களாக இருப்பார்கள் என்பதால் முழுப் பழியையும் எங்கள் வீரர்கள் மீது சுமத்த முடியாது’ என அவர் கூறியுள்ளார்.
அத்துடன், ஒரு குறிப்பிட்ட அளவிலான கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம் பேணப்பட வேண்டும் என்றாலும், வீரர்களின் சுதந்திரம் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
அவுஸ்திரேலிய பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது அவர்களுக்கு வழக்கத்தை விட அதிக சுதந்திரம் அளிக்கப்பட்டதாக நான் உணர்கிறேன்.
அவுஸ்திரேலியாவில் சிலர் பாலியல் தொழிலில் ஈடுபடுவதை ஒரு தொழிலாக வைத்திருப்பதையும், அவர்கள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றச்சாட்டுகள் மிகவும் பொதுவானவை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே எம் வீரர் மீது அனைத்து பழிகளையும் நாம் சுமத்த வேண்டிய அவசியமில்லை.
வீரர்களின் ஆட்டத்தை பாதிக்காத வகையில் எல்லைக்குள் இருக்கும் வரை அவர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்.
எப்போதாவது ஒரு கிளப்புக்குச் செல்வதில் நான் எந்தத் தவறும் காணவில்லை. ஆனால் இது மீண்டும் மீண்டும் நடந்தால், அவர் பயிற்சிகளைத் தவறவிட்டு, விளையாட்டின் மீதான தனது கவனத்தையும் அர்ப்பணிப்பையும் இழக்க நேரிடும்.
ஆனால் இந்த விடயங்களை ஒருமுறை அல்லது இரண்டு முறை அனுபவிக்க அனுமதிப்பது தவறல்ல. நான் பார்த்தவற்றின் படியும், வழக்கறிஞர்களின் கூற்றுப்படியும் தனுஷ்க விடுவிக்கப்பட வேண்டும்.
அவர் விடுதலையானதும் அவரை தொடர்ந்து அணிக்காக விளையாட அனுமதிக்க வேண்டும். என்றார்.
#The Morning
