கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நடிகை தமிதா அபேரத்னவின் நலன் விசாரிப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (12) காலை மெகசின் சிறைச்சாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறைச்சாலையிலிருந்து வெளியே வந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், பொது மக்களின் போராட்டத்தை முன்னெடுத்த தமித அபேரத்ன போன்றவர்கள் கைதாகின்றமை தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்தார்.