நாட்டிலுள்ள 3 அரச நிறுவனங்களை விரைவில் தனியார்மயப்படுத்த தயாராகி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
த எகனமிஸ்ட் சஞ்சிகைக்கு வழங்கிய செவ்வியில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்படி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் (SLIC) மற்றும் ஸ்ரீலங்கா டெலிகொம் ஆகிய அரச நிறுவனங்களை தனியார்மயப்படுத்தலாம்.
அதேபோல இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தையும் தனியார்மயப்படுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், தொழிற்சங்கங்கள் குறித்து தனக்கு கவலையில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.