தேசிய குறைந்தபட்ச மாத ஊதியம் மற்றும் தினக்கூலியை உயர்த்த தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, அமைச்சரவைக்கு முன்மொழிந்துள்ளார்.
தற்போதைய தேசிய குறைந்தபட்ச மாத வேதனத்தை 12,500 ரூபாவிலிருந்து 17500 ரூபாவாகவும் (5000 ரூபாவினால்), தேசிய குறைந்தபட்ச தினக்கூலியை 500 ரூபாவில் இருந்து 700 ரூபாவாகவும் (200 ரூபாவினால்) அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட உள்ளது.
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் கீழ் பணவீக்கம் ஜூன் மாதத்தில் 59மூ ஆக அதிகரித்துள்ளதால் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் கடும் நெருக்கடியில் உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.