தடை செய்யப்பட்டிருந்த க்ளைபோசேட் களைக்கொல்லி இறக்குமதிக்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
ஆகஸ்ட் 5 முதல் அமுலாகும் வகையில் இந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
இதன்படி கட்டுப்பாடுகளுடன் க்ளைபோசேட் இறக்குமதி செய்ய முடியும்.
எவ்வாறாயினும், க்ளைபோசேட் பாவனையால் சிறுநீரகத் தொகுதி கோளாறு உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படுவதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
