நுவரெலியா – ஹட்டன் – வனராஜவில் சிக்கிய சிறுத்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நேற்று வனவிலங்கு அதிகாரிகள் குறித்த சிறுத்தையை மீட்க சென்ற போது மரத்தில் சிக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், வனஜீவராசி அதிகாரிகளின் கவனக்குறைவினால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்டால் உடனடியாக விசாரணை நடத்தி வனஜீவராசிகள் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு செயலாளருக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
