இலங்கையில் மங்கிபொக்ஸ் (Monkeypox) சோதனை இன்று முதல் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் இந்த வைரஸ் பரவி வருகின்ற நிலையில், உலக அவசர நிலையாக உலக சுகாதார ஸ்தாபனம் இதனை அறிவித்துள்ளது.
இந்தநிலையில் இலங்கையிலும் மங்கிபொக்ஸ் சோதனை நடத்துவதற்கான பிசிஆர் கருவிகளை கடந்த வெள்ளிக்கிழமை உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு வழங்கியது.
இதன்படி இன்று முதல் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
