கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக்கு வரும் திகதி தனக்கு இதுவரை தெரிவிக்கப்படவில்லை என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,
கேள்வி – கோட்டாபய ஏன் நாட்டை விட்டு வெளியேறினார்?
பதில் – அவர் தப்பியோடியதாக குற்றம் சாட்டுவது யார்?
கேள்வி – மக்கள் தான்
பதில் – யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். அவை அனைத்தும் கட்டுக்கதைகள். அவர் மருத்துவ பரிசோதனைக்காகவே அங்கு சென்றுள்ளார்.
