காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் செயற்பட்ட ரெட்டா என அறியப்படும் ரதிந்து சேனாரத்னவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று அவருக்கு பிணை வழங்கியுள்ளது.
போராட்டக்களத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் அவர் நேற்று முன்தினம் குற்றத்தடுப்பு பிரிவுக்கு வாக்குமூலம் வழங்க சென்றிருந்தபோது கைதுசெய்யப்பட்டார்.
இதனையடுத்து நேற்று மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே அவரை நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.