Wednesday, April 30, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாட்டு யானை தாக்கி ஒருவர் பலி

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

நாவுல பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ரஜவெல கிராமத்தில் காட்டு யானை தாக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளதாக நாவுல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொங்கஹவெல – ராஜவெல பிரதேசத்தை சேர்ந்த யு.ஜி.சமிந்த பண்டார என்ற 50 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பக்கத்து ஊரில் நடந்த இறுதிச் சடங்கொன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 3 பேரை காட்டு யானை துரத்தியுள்ளது.

இதன்போது இருவர் தப்பித்து சென்றதாகவும் ஒருவர் மட்டும் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles