அரச வைத்தியசாலைகளில் தற்போது 52 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
மருத்துவ திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, சுகாதாரத் துறை தொடர்பான ஒன்பது சட்டமூலங்கள் எதிர்காலத்தில் முன்வைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
பற்றாக்குறையாக உள்ள மருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டு வருவதாகவும், தட்டுப்பாடு நிலவும் மருந்துகளுக்கு மாற்று மருந்துகள் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
