Wednesday, September 17, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகணவன் கண் முன்னே தவறான முடிவெடுத்த பெண்

கணவன் கண் முன்னே தவறான முடிவெடுத்த பெண்

யாழ்ப்பாணம், ஆனை கோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயொருவர் நேற்று (01) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவரது கணவர் சுவிட்சர்லாந்தில் பணிபுரிந்து வருவதால், நேற்று வீடியோ அழைப்பில் ஈடுபட்டிருந்த போது, ​​இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர், அந்த பெண் தனது கணவர் வீடியோ அழைப்பில் இருந்தபோது வீட்டில் தூக்கிட்டு தொங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனை கண்டு குறித்த பெண்ணின் கணவர் அயலவர்களுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து, பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன், எனினும் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ய

நிலாஜினி லகிதா என்ற 40 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles