வெலிஓயா, கல்யாணபுர பிரதேசத்தில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு தற்போது வெலிஓயா பொலிஸ் காவலில் உள்ள சிறுமி இன்று (05) பிற்பகல் முல்லைத்தீவு சட்ட வைத்தியரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
வெலிஓயா பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் பாதுகாப்பில் உள்ள 4 வயது 06 மாத சிறுமி வெலிஓயா பொலிஸ் அதிகாரிகளின் மேற்பார்வையில் முல்லைத்தீவு பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ‘குகுல் சமிந்த’ மற்றும் அவரது இரண்டு மனைவிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.