Tuesday, September 17, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொடூரமாக தாக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலைக்கு

கொடூரமாக தாக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலைக்கு

வெலிஓயா, கல்யாணபுர பிரதேசத்தில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு தற்போது வெலிஓயா பொலிஸ் காவலில் உள்ள சிறுமி இன்று (05) பிற்பகல் முல்லைத்தீவு சட்ட வைத்தியரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

வெலிஓயா பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் பாதுகாப்பில் உள்ள 4 வயது 06 மாத சிறுமி வெலிஓயா பொலிஸ் அதிகாரிகளின் மேற்பார்வையில் முல்லைத்தீவு பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ‘குகுல் சமிந்த’ மற்றும் அவரது இரண்டு மனைவிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Keep exploring...

Related Articles