Friday, May 17, 2024
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகிணற்றிலிருந்து இரண்டரை மாத குழந்தை சடலமாக மீட்பு

கிணற்றிலிருந்து இரண்டரை மாத குழந்தை சடலமாக மீட்பு

வீடு ஒன்றுக்குள் அருகில் உள்ள கிணற்றிலிருந்து இன்று (02) அதிகாலை இரண்டரை மாத குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கந்தகுடாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மொஹமட் பாத்திமா என்ற இரண்டரை மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த குழந்தையின் தாய் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Keep exploring...

Related Articles