இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சாந்தனின் சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அங்கு பிரேத பரிசோதனைகள் இடம் பெறவுள்ளதுடன் அதன் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று முற்பகல் 11.35 அளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 122 என்ற விமானம் ஊடாக அவரது சடலம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்குடன் தொடர்புடைய சாந்தன், சென்னையில் வைத்து கடந்த 28ஆம் திகதி காலமானார்.