Friday, October 10, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாணாமல் போயிருந்த இளைஞன் சடலமாக மீட்பு

காணாமல் போயிருந்த இளைஞன் சடலமாக மீட்பு

நான்கு நாட்களாக காணாமல் போயிருந்த இளைஞனின் சடலம் நேற்று (29) தலவாக்கலை புடலு ஓயா வீதி பாலத்தின் கீழ் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

தலவாக்கலை ஹொலிரூட் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய கசுன் லக்மால் என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

சில தினங்களுக்கு முன்னர் நீரில் மூழ்கி உயிரிழந்த பாடசாலை மாணவர் ஒருவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதாகக் கூறி சென்ற மகன் வீடு திரும்பாததால் அவரது தாயார் தலவாக்கலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles