புதிதாக எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14% ஆக அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு திட்டம் தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் புதிய எச்ஐவி தொற்றாளர்களின் எண்ணிக்கை 14.3% அதிகரித்துள்ளதாக அதன் பணிப்பாளர் சமூக மருத்துவ நிபுணர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு, 694 புதிய எச்.ஐ.வி நோயாளிகள் கண்டறியப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்களாவர்.
இதன்படி, 611 ஆண்கள் புதிதாக தொற்றுக்குள்ளானவர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும், இது 88 வீதமாகும் என வைத்தியர் ஜானகி விதானபத்திரன தெரிவித்தார்.
மேலும், இந்த காலப்பகுதியில், 81 பெண்கள் புதிதாக எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இது 11.7 சதவீதமாகும்.
இதன்படிஇ சமூகத்தில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை சுமார் 4,100 என மதிப்பிடப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில், 607 புதிய எச்.ஐ.வி. நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டனர்.