நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ், இன்று அதிகாலையுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 955 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் 187 கிராம் ஹெரோயின், 126 கிராம் ஐஸ், 14 கிலோ 700 கிராம் கஞ்சா, 136 போதை மாத்திரைகள், 148 கிராம் மாவா மற்றும் 102 கிராம் மதன மோதகம் உள்ளிட்ட போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.