Wednesday, May 6, 2026
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவீதிகள் இருளில் மூழ்கும் அபாயம்

வீதிகள் இருளில் மூழ்கும் அபாயம்

வீதிகளின் ஓரங்களில் உள்ள மின்விளக்குகளுக்கு மின்சார சபை பெரும் கட்டணத்துடன் உண்டியல்களை உள்ளூராட்சி அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (10) பேசும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, இந்த கட்டணங்களை உள்ளூராட்சி அதிகாரிகள் செலுத்தாததால், மின்வெட்டு ஏற்பட்டு சாலைகள் இருளில் மூழ்கும் அபாயம் உள்ளதாக அவர் கூறினார்.

மேலும், பெரும்பாலான உள்ளூராட்சி நிறுவனங்கள் இன்று மிகவும் சிரமப்பட்டு இயங்குவதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், இது தொடர்பில் கலந்துரையாடி தீர்வை வழங்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles