யாழ்ப்பாணம் பகுதியில் நேற்று (04) மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற ஒருவர் திடீரென மயங்கி உயிரிழந்துள்ளதாக யாழ் வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியைச் சேர்ந்த அமலசூரி அன்ரயன்யுத் என்ற 42 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் உட்பட மூவர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
அங்கு அவர் திடீரென மயங்கி விழுந்து நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
எனினும் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.