அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் உள்ள உயர்நிலைப் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
பாடசாலை விடுமுறை நிறைவடைந்து பாடசாலைகள் ஆரம்பிக்கும் போது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அந்த பாடசாலையில் 6 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த ஐவரில் நால்வர் பாடசாலை மாணவர்கள் என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்ட 17 வயது மாணவனும் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.